விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்
Jul 14 2018 11:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். மகளிருக்கான இறுதிப் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
லண்டனில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 11வது நாளான நேற்றிரவு ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. முதல்போட்டியில் தரவரிசை பட்டியலில் 8வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6, 6-7, 6-7, 6-4, 26-24 என்ற செட் கணக்கில் கெவின் ஆண்டர்சன் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதிப் போடியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் ஜோக்கோவிச்சை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 7-6, என்ற செட் கணக்கில் இருந்த நிலையில், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.