உலகக் கோப்பை கால்பந்து போட்டி - மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
Jul 14 2018 11:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன. ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் நாளை மோத உள்ளன.
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இப்போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த அரையிறுதிப் போட்டிகளில், பிரான்ஸ் அணியிடம் பெல்ஜியமும், குரோஷியா அணியிடம் இங்கிலாந்தும் தோல்வி அடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி அடைந்த பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள், மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இன்று மோத உள்ளன.
இதேபோல், கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்று, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.