டி.என்.பி.எல். கிரிக்‍கெட் தொடரில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்‍க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Jul 11 2018 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் ​தீர்ப்பளித்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளைப் போல் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறையும் இப்போட்டி நடைபெறுகிறது. இன்று தொடங்கி அடுத்த மாதம் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் போட்டிகளில், வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக குழு அண்மையில் அறிவித்தது.

இதனை எதிர்த்து டி.என்.பி.எல் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அவசர வழக்காக இன்று இதனை விசாரித்தது. டி.என்.பி.எல். லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்ற உச்சநீதிமன்ற நிர்வாக குழுவின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. எனவே இந்த போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க முடியாது என்றும் உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00