உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம் - பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவிய பிரேசில் அணி போட்டியில் இருந்து வெளியேற்றம்
Jul 7 2018 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணியை தோற்கடித்த பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணியை தோற்கடித்த பெல்ஜியம் ஆகிய அணிகள் அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் கலந்துகொண்ட இந்த தொடரில், லீக் மற்றும் 2-வது சுற்றின் முடிவில் மொத்தம் 24 அணிகள் தோல்வி அடைந்து, போட்டியில் இருந்து வெளியேறி விட்டன. இதையடுத்து, காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் மற்றும் உருகுவே ஆகிய அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி, உருகுவே அணியை கலங்கடித்தது. இதனால், ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் வரானே மற்றும் 61 வது நிமிடத்தில் கிரீஸ்மான் ஆகியோர் தலா ஒருகோல் அடித்தனர். இதையடுத்து, காலிறுதியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி, அரை இறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி போட்டியில், பெல்ஜியம் அணியும், பிரேசில் அணியும் மோதியன. முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் பெர்னான்டின்ஹோ, கெவின் டி ப்ரூனே தலா ஒரு போட்டதால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தனர். 2வது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரீனட்டோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இந்நிலையில் பெல்ஜியம் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால், பிரேசில் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதேபோல், இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளும், ரஷ்யா மற்றும் Croatia அணிகளும் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற உள்ளன.