மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூரில் கழகம் சார்பில் கபடி போட்டி : வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு - கோப்பை
Jul 2 2018 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில், வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.
மாண்புமிகு அம்மாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கு இணங்க, திருவள்ளூர் மத்திய மாவட்டம், மதுரவாயல் பகுதி கழகம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இடத்தை பிடித்த மேட்டுக்குப்பம் அணி வீரர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது இடத்தை பிடித்த கோவூர் அணி வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடத்தை பிடித்த பெரியார் அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவேற்காடு திரு. பா.சீனிவாசன், மதுரவாயல் பகுதி கழக செயலாளர் திரு.இ.லக்கி முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. துண்டலம் பாபு, 148- வது வட்ட கழக செயலாளர் திரு. வி.வி.கிரிதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.