கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Jun 26 2018 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இளைஞர்களை நல்வழிபடுத்தும் வகையில, கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிகெட் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிகெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. வெற்றி பெற்ற அணிக்கு, கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.S.K.பாலமுருகன் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவில் பள்ளிக்களுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில், சென்னை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றுப் போட்டியில், ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மற்றும் திருநகர் இந்திரகாந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில், ராமநாதபுரம் விளையாட்டு விடுதி அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.