ஐ.பி.எல். இறுதிபோட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? : சென்னை-ஹைதரபாத் அணிகள் பலப்பரீட்சை
May 22 2018 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்திற்கு தகுதி பெறுவது யார்? என்பதற்கான முதல் பிளே-ஆப் போட்டியில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய 11-வது ஐ.பி.எல். போட்டியில், 56 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்து, புள்ளிகள் அடிப்படையில் சென்னை, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், சென்னை அணியை, ஹைதரபாத் அணி எதிர்கொள்கிறது. பட்டியலில் முதலிடம் பிடித்த ஹைதரபாத் அணி, தொடக்கத்தில் இருந்தே கேன் வில்லியம்சன் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் தவான், ஹேல்ஸ், மணீஷ் பாண்டே ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ரஷித் கான், சித்தார்த் கவுல் ஆகியோரின் பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை அணியில், ராயுடு, வாட்சன், ரெய்னா, தோனி ஆகியோர் அதிரடியாக ரன்களை குவிக்க தயாராக உள்ளனர். இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால், இன்றைய ஆட்டம் இறுதிவரை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்பதால், இப்போட்டி, கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இப்போட்டி, இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறும். அதேநேரம் தோல்வியடையும் அணிக்கு மற்றொரு ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.