பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
May 21 2018 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் நடைபெற்று வரும் 11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடர், தற்போது விறுவிறுப்பான இறுதிகட்டத்தை எட்டிள்ளது. புனேயில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில், 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி, பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி தரும் வகையில், அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டக்-அவுட்டானார். பின்ச் 4 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கருண் நாயர் மட்டும் 54 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 19 புள்ளி 4 ஓவரில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சென்னை சார்பில் லுங்கிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு ராயுடு, டுபிளசி, பில்லிங்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அபாரமாக விளையாடிய ரெய்னா அரை சதம் கடந்தார். தோனி ஒரு சிக்சர் பறக்கவிட, சென்னை அணி 19 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் தோனி 16 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர். இந்த தோல்வியால் பஞ்சாப் அணி போட்டியிலிருந்து வெளியேறியது.
ஐ.பி.எல். போட்டியின் பரபரப்பான 'பிளே-ஆப்' சுற்றில், வரும் 22-ம் தேதி, மும்பையில் நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில், ஐதராபாத் அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது. 23-ம் தேதி கோல்கட்டாவில் நடைபெறவுள்ள போட்டியில், ராஜஸ்தானை கோல்கட்டா அணி எதிர் கொள்கிறது.