தமிழகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு - மீறி நடத்துவது காவிரி விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என அரசியல் கட்சிகள் கருத்து - சென்னை அணி வீரர்களுக்கும், சேப்பாக்கம் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு
Apr 9 2018 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான போராட்டங்கள் காரணமாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள சென்னை அணி வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்படும் வரை சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திட்டமிட்டபடி சென்னையில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நாளை நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்துள்ளது. வீரர்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சேப்பாக்கம் மைதானம் பகுதியில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.