திருச்சியில் அகில இந்திய அளவிலான கபடி லீக் போட்டி : வீரர், வீராங்கனைகள் தேர்வு

Jan 22 2018 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அகில இந்திய அளவிலான கபடி லீக் போட்டிக்கு, 7-ம் கட்ட வீரர், வீராங்கனைகள் திருச்சியில் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்திய அளவிலான புரோ கபடி போட்டியைப்போன்று, ஆடவர் மற்றும் மகளிர்க்கான ஆர்கா கபடி லீக் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் மின்னொளியில் நடைபெறவுள்ளது. இதற்காக 7-ம் கட்ட வீரர், வீராங்கனைகள் போட்டித் தேர்வு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், ஜெய்பூர், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் 70பேர் பங்கேற்றிருந்தனர்.

ரைடிங், கேட்சிங் திறமைகளைக்கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இரண்டாயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் தேர்வில் பங்கேற்றுள்ளதாகவும், வரும் 28-ம் தேதி லக்னோவில் இறுதிக்கட்ட தேர்வுக்குப் பிறகு, அணிகள் தேர்வு செய்யப்பட்டு அமெச்சூர் கபடி கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு, பல்வேறு அணிகளாக பிரித்து அகில இந்திய கபடி லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00