கேசவபுத்தன்துறை படகுப்போட்டி மற்றும் நீச்சல் போட்டி : போட்டியில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய மீனவர்கள்
Jan 17 2018 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கேசவபுத்தன்துறையில் நடைபெற்ற படகுப்போட்டிகளில், ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
காணும் பொங்கலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கேசவபுத்தன்துறை மீனவகிராமத்தில் நீச்சல் போட்டி, வடம் இழுத்தல், படகுபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதற்காக கடற்கரையில் கூடிய மீனவர்கள் படகுப்போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மீனவர்கள் ஆக்ரோஷமாக துடுப்பு போட்டு முன்னேறி சென்றது, அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடையங்களும் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆகியோர் அதிக அளவில் குவிந்து, காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், அரியமான் கடற்கரையில் கயாக் துடுப்பு படகு போட்டி, பாராகிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.