சர்வதேச வில்வித்தை போட்டி : சேலம் மாணவி பேபி சாலினி 2 வது இடம் பிடித்து சாதனை
Dec 27 2017 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி பேபி சாலினி வில்வித்தை போட்டியில் சர்வதேச அளவிலான 2 வது இடமும், மாநில அளவில் முதலாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில் இளநிலை கணினி கல்வி பயின்று வரும், வனவாசி பேரூராட்சி பகுதியை சேர்ந்த மாணவி பேபிசாலினி. இவர் பள்ளி பருவத்தில் இருந்தே வில்வித்தை போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவர் மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பிடித்து வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையடுத்து மாநில அளவிலான வில்வித்தை போட்டி மேட்டூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி பேபி சாலினி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். சர்வதேச போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெள்ளி மற்றும் தங்கபதக்கம் வென்ற மாணவி பேபி சாலினிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.