கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டி : 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Nov 13 2017 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் மணவாடியில், மாநில அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
வயது அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.