லண்டனில் நடைபெறும் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : முதல் ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் முதல் வெற்றியை பதிவு செய்தார்
Nov 13 2017 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் நடைபெற்று வரும் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில், ரோஜர் ஃபெடரர், தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
தரவரிசையில் முதல் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ATP டென்னிஸ் என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, லண்டனில் நேற்று தொடங்கியது.
தொடக்க நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் Jack Sock-ஐ எதிர்கொண்டார்.
1 மணி நேரம் 31 நிமிடம் வரை நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், ரோஜர் ஃபெடரர் 6-4, 7-6 என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வென்று, முதல் வெற்றியை பதிவு செய்தார்.