கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி : பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Nov 12 2017 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற, மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டிகள், கிருஷ்ணகிரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில், 4 வகையான போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு வயது பிரிவிலும் 6 மாணவ, மாணவிகள் என, மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், தேசிய அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டியில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.