தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டி : 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Oct 17 2017 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதில் 7 , 11 ,15, 17 வயதுடையவர்கள் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.