கனடாவில் உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டி : 3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
Aug 19 2017 9:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் நடைபெற்ற உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கனா விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்ற இளைஞர் கனடாவில் நடைபெற்ற உலக அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். 29 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் 13 வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் 37 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மொத்தம் 5 தங்கம் 2 வெள்ளி பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேஷ் 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். இதையடுத்து சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்திற்கு வந்த கணேஷுக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதேபோல் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள Pala பகுதியை சேர்ந்த Jobby George என்பவர் தன்னிச்சையாக ஆறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். போட்டியில் வென்று நாடு திரும்பிய அவருக்கு கொச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமானோர் திரண்டு அவருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.