டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி
Apr 30 2017 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மொஹாலியில் இன்று நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மொஹாலியில் இன்று மாலை தொடங்கிய ஐ.பி.எல். தொடரின் 36-வது ஆட்டத்தில், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இப்போட்டிக்கான பஞ்சாப் அணியில், ஹசீம் ஆம்லா, தமிழக வீரர் நடராஜன் மற்றும் வருன் ஆரோன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதேபோல், டெல்லி அணியில் கேப்டன் ஜாகீர்கான் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக, பேட்ஸ் மேன் கருண் நாயர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும், கம்மின்ஸ், Ankit Bawne நீக்கப்பட்டு, சாம் பில்லிங்ஸ், நதீம் மற்றும் ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, பேட் செய்த தொடங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் பில்லிங்ஸ், ரன் எதுவும் எடுக்காமல் சந்தீப் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, டெல்லி அணி நிதானமாக ரன் குவித்து வருகிறது.