இந்திய ஜூடோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஜூடோ சங்கம் இணைந்து ஜெ ஜெயலலிதா கோப்பைக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டிகள்
Feb 25 2017 9:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய ஜூடோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஜூடோ சங்கம் ஆகியவை இணைந்து ஜெ. ஜெயலலிதா கோப்பைக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடத்துகின்றன.
இந்திய ஜூடோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஜூடோ சங்கம் ஆகியவை இணைந்து ஜெ. ஜெயலலிதா கோப்பைக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்துகிறது. 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில், இந்தியா முழுவதிலும் இருந்து 34 அணிகளைச் சேர்ந்த 600 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில், தேசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களும் இடம்பெறுகின்றனர். இப்போட்டிகளின் மூலம் ஜூடோ விளையாட்டு ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்த முடியும் என நம்புவதாக தமிழ்நாடு ஜூடோ சங்கத் தலைவர் திரு. விஜய் முரளி தெரிவித்தார்.