அகில இந்திய பல்கலைக்கழக மகளிருக்கான கால்பந்து போட்டிகள் காஞ்சிபுரத்தில் தொடக்கம் - 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு
Feb 25 2017 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய பல்கலைக்கழக மகளிருக்கான கால்பந்து போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தொடங்கியுள்ளன. இதில் 320 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில், அகில இந்திய பல்கலைக்கழக மகளிருக்கான, மண்டல கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. இதனை அமைச்சர் திரு.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். 4 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில், டெல்லி, கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 16 பிரிவுகளைச் சேர்ந்த 320 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இறுதிச்சுற்று போட்டிகள், வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளன.