இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி
Feb 25 2017 6:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புனேயில் நடைபெற்ற, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 105 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில், 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களுடன் 3-ம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் அந்த அணி 440 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில், 441 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் Nathan Lyon 4 விக்கெட்டுகளையும், Steve O'Keefe 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் Steve O'Keefe ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.