திருச்சியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில், ஜமால் முகம்மது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது
Feb 23 2017 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில்நடைபெற்ற இப்போட்டிகளில், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 கல்லூரி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவில், திருச்சி ஜோசப் கல்லூரி அணியும், ஜமால் முகம்மது கல்லூரி அணியும் இறுதியாட்டத்தில் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், 5-4 என்ற கோல் கணக்கில் ஜமால் முகம்மது கல்லூரி அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இப்போட்டியினை, ஏராளமான கால்பந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.
இதனிடையே, தஞ்சாவூரில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில், 160 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கூடைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.