இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளை நடத்த 1 கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் : பி.சி.சி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Dec 7 2016 9:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை BCCI முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்த விவகாரம் காரணமாக, அனுமதியின்றி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பெருமளவில் நிதி அளிக்கக்கூடாது என BCCI-க்கு லோதா குழு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பாதிப்பு ஏற்படும் என BCCI ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், இப்போட்டிக்காகவும், சென்னையில் வரும் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காகவும், நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கும்படி, BCCI, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்2 டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய BCCI-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய BCCI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.