நான்கு நிமிடத்தில் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து, திருச்சி மாணவர் புதிய சாதனை - ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு
Nov 1 2016 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நான்கு நிமிடத்தில் பல்வேறு உடற்பயிற்சிகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக செய்து, திருச்சியைச் சேர்ந்த மாணவர் புதிய சாதனை படைத்தார்.
திருச்சியைச் சேர்ந்தவர் விஜய்ராஜ். கல்லூரி மாணவரான இவர், தான் கற்ற உடற்பயிற்சியின் மூலம் லிம்கா சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில், 4 நிமிடத்தில் புல்அப்ஸ், தண்டால், சிட்அப்ஸ், அப்டமன், பார்தண்டால் ஆகிய உடற்பயிற்சிகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக மேற்கொண்டு புதிய சாதனையினை படைத்தார்.
பார்வையாளர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையானது, சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளதுடன், ஜெட்லி புக்ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது. கல்லூரி மாணவரின் இந்த புதிய சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.