இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : ராஞ்சியில் பகலிரவு ஆட்டமாக தொடக்கம்
Oct 26 2016 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி Ranchi-யில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து, இவ்விரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன.
தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்திலும், Mohali-ல் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி Jharkhand மாநிலம் Ranchi-யில் இன்று, பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.