பலத்த பாதுகாப்புக்கு இடையே பங்களாதேஷ் நாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் : டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது

Oct 1 2016 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பலத்த பாதுகாப்புக்கு இடையே பங்களாதேஷ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் நாட்டில் 5 வார காலம் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதனையடுத்து இங்கிலாந்து அணியினர் நேற்று, தலைநகர் டாக்கா சென்றடைந்தனர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர்கள், பின்னர் பேருந்தில் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பங்களாதேஷ் நாட்டில் கடந்த ஜுலை மாதம் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில், வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவியது. எனினும் பாதுகாப்பு சூழ்நிலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப்பின் இங்கிலாந்து அணி, பங்களாதேஷ் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவது என முடிவு செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00