தெலுங்கானாவில் நடைபெறும் தேசிய அளவிலான மகளிர் வலைபந்து போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக அணி புறப்பட்டுச் சென்றது
Oct 1 2016 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு குழுமம் சார்பில்,தேசிய அளவிலான வலைபந்துப் போட்டி வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக அணி சார்பில் சென்னை, சேலம், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 12 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு பரமக்குடியில் பயிற்சி அளிக்கப்பட்டது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு பிறகு வீராங்கனைகள் அனைவரும் நேற்றிரவு தெலுங்கானா புறப்பட்டுச் சென்றனர்.