ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு, சென்னையில் உற்சாக வரவேற்பு - முதலமைச்சர் உத்தரவின்பேரில், விமான நிலைத்தில் அமைச்சர்கள் வரவேற்று வாழ்த்து - 2 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கிய முதலமைச்சருக்கு மாரியப்பன் மனமார்ந்த நன்றி
Sep 24 2016 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசில் நாட்டில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் உத்தரவின்பேரில், அமைச்சர்கள், மாரியப்பனை வரவேற்றனர்.
பிரசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் கடந்த 18-ம் தேதி முடிவடைந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த திரு. மாரியப்பன், உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டார். அதில் ஒன்று புள்ளி எட்டு ஒன்பது மீட்டர் உயரம் தாண்டிய அவர், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். போட்டிகள் முடிவடைந்ததும் தாயகம் திரும்பிய மாரியப்பன், நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் திரு. க. பாண்டியராஜன், திரு. P.பெஞ்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மிகுந்த ஊக்கம் அளித்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தங்கப் பதக்கம் வென்ற தனக்கு, 2 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்ததற்கு மாரியப்பன் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.