திருச்சியில் தொடங்கியுள்ள தென்னிந்திய அளவிலான ஹாக்கிப் போட்டி : 18 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு
Aug 27 2016 12:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் தொடங்கியுள்ள தென்னிந்திய அளவிலான ஹாக்கிப் போட்டிகளில், 18 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
கல்லூரிகளுக்கு இடையே ஒற்றுமையுணர்வை வலுப்படுத்தும் நோக்கிலும், மாணவர்களிடையே ஹாக்கி விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், திருச்சியில் இன்று தென்னிந்திய அளவிலான 16-வது ஹாக்கிப் போட்டிகள் தொடங்கியுள்ளன. லீக் மற்றும் நாக்அவுட் முறைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், கேரளா மற்றும் சென்னை, திண்டுக்கல், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் இருந்து 18 அணிகள் கலந்துகொண்டுள்ளன. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், கோவை கல்லூரி அணி, திருச்சி கல்லூரி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களைத் தொடர்ந்து, நாளை மறுதினம் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.