உத்தரகண்டில், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
Aug 25 2016 10:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், Haldwani பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. உத்தரகண்டில் வரும் 2018ம் ஆண்டு 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், வீரர், வீராங்கனைகளை தயார்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டம் அமைந்ததாக, நைனிடால் விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.