நாகர்கோவிலில் நடைபெற்றுவரும் தென்னிந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி கேரள அணியை வென்றது

Jul 29 2016 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றுவரும் தென்னிந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில், சென்னை அணி கேரள அணியை வென்றது.

கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், தென்னிந்திய அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டிகள் நாகர்கோவிலில் நேற்று தொடங்கின. அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர், மகளிர் என இருபிரிவுகளாக லீக் மற்றும் நாக்அவுட் முறைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. பெண்கள் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணியும், கேரள அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், சென்னை அணி 42க்கு 29 என்ற புள்ளி கணக்கில் கேரள அணியை வென்றது. இப்போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடவர் பிரிவில் 8 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டத்தில் நாகை அணியை சேலம் அணி வென்றது. இதேபோல், மகளிர் பிரிவில் ஈரோடு அணியை சென்னை அணி தோற்கடித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00