திருச்சியில் பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான நடைபெற்ற நீச்சல்போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
May 27 2016 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான நீச்சல்போட்டி இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
உடலுக்கு உற்சாகத்தைத் தரும் நீச்சல் பயிற்சியினை ஊக்கப்படுத்தும் வகையில், திருச்சியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், ஃபீரி ஸ்டைல், பேக் ஸ்டோக், பட்டர் ஃபிளை உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.