ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர் நியமனம்
May 27 2016 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் இயக்குநராக இருந்த ரவிசாஸ்திரியின் ஒப்பந்தம், கடந்த உலகக்கோப்பை T-20 தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைளில் பி.சி.சி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 43 வயதான சஞ்சய் பாங்கர், இந்திய அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் நடந்து முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பையுடன் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 11-ம் தேதி தொடங்கவுள்ள ஜிம்பாப்வே அணியுடனான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சஞ்சய் பாங்கர் பயிற்சியின்கீழ், இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதேபோல், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக Abhay Sharma நியமிக்கப்பட்டுள்ளார்.