ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
May 4 2016 7:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், இளம்வீரர் Rishabh Pant-ன் அதிரடி ஆட்டதால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி டேர்டேவில்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி, டெல்லி வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குஜராத் அணியின் தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் எடுத்தார்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி-காக், Rishabh Pant ஆகியோர் குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இளம்வீரர் Rishabh Pant, 69 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டி-காக்கும், 46 ரன்கள் எடுத்திருந்த போது, கவுசிக் பந்துவீச்சில், தனது விக்கெட்டை பறிகொடுத்தார். எனினும், சஞ்சு சாம்சன், ஜெ.பி. டுமினி ஆகியோர் பொறுப்புடன் விளையாடி டெல்லி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதனால், 17 புள்ளி 2 ஓவர்களில் டெல்லி அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து, 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. ஐ.பி.எல். அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த ரிஷப் பாண்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.