புதுச்சேரியில் தொடங்கியுள்ள தேசிய ஜுனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி : நாடு முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
May 2 2016 7:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் தொடங்கியுள்ள தேசிய ஜுனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில், நாடு முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டுள்ளன.
புதுச்சேரியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 67-வது தேசிய ஜுனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், உப்பளம் உள்விளையாட்டரங்கில் நேற்று தொடங்கின. 8 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில், ஆடவர் பிரிவில் 26 மாநில அணிகளும், மகளிர் பிரிவில் 22 மாநில அணிகளும் கலந்துகொண்டுள்ளன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில், மகளிர் பிரிவில் சத்தீஷ்கர் அணி, 59-க்கு 58 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தமிழக அணியை வென்றது. ஆடவர் பிரிவில், கேரள அணி 83க்கு 81 என்ற புள்ளிக் கணக்கில் தமிழக அணியை தோற்கடித்தது.
இதேபோல், லெவல்-1 ஆடவர் பிரிவில், ராஜஸ்தான் அணியும், மகளிர் பிரிவில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் அணிகளும் வெற்றிபெற்றன. லெவல்-2 ஆடவர் பிரிவில், மிசோரம் அணியும், மகளிர் பிரிவில் ஹிமாச்சலப்பிரதேசம், தெலங்கானா, கோவா ஆகிய அணிகளும் வெற்றிபெற்றன.