அரை மணி நேரத்தில் 596 ஆசனங்கள் செய்தும், 60 நொடிகளில் 64 ஆசனங்கள் செய்தும் திருப்பூரைச் சேர்ந்த மாணவி சாதனை
Sep 3 2016 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் அரை மணி நேரத்தில் 596 ஆசனங்கள் செய்தும், 60 நொடிகளில் 64 ஆசனங்கள் செய்தும் சாதனை படைத்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற மாணவி, 2-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஆசனங்களை கற்றுக்கொள்ள தொடங்கினார். தற்போது 8-ம் வகுப்பு படித்து வரும் அவர், பல்வேறு ஆசனங்களை செய்து சாதனை படைத்து வருகிறார். ஏற்கெனவே குஜராத், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டிகளில் பங்கேற்று ஆசனங்கள் செய்து, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வைஷ்ணவி, அரை மணி நேரத்தில் 596 ஆசனங்களை செய்தும், 60 நொடிகளில் 64 ஆசனங்களை செய்தும் சாதனை படைத்துள்ளார். உலகப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப்பதக்கம் வெல்லவேண்டும் என்றும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கரங்களால் விருது வாங்கவேண்டும் என்பதே தனது லட்சியம் என்று மாணவி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.