மங்கோலியாவில் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி : பிரிட்டிஷ் வீரர் முதலிடம்
Feb 5 2016 6:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மங்கோலியாவில் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரிட்டிஷ் வீரர் முதல் பரிசை வென்றார்.
கடும் குளிர் பிரதேசமான மங்கோலியாவில் Tuul gol ஆற்றுப் பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், உறைபனியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 9 பேர் கலந்து கொண்டனர். ஓநாய்கள் மற்றும் காட்டெருதுகள் அதிகம் காணப்படும் இந்த ஆபத்தான பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு பாதுகாப்பாக குறிப்பிட்ட தூரங்களுக்கு துணை ஓட்ட வீரர்களும் பங்கேற்றனர். மேலும், பனிச்சறுக்கு வண்டிகளில் உணவு மற்றும் மருந்துகளை சுமந்த படி பழக்கப்படுத்தப்பட்ட நாய்களும் இந்த போட்டியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் போட்டியில் பிரிட்டிஷ் வீரர் Andrew Murray முதலிடத்தையும், ஆஸ்திரேலியா வீரர் douglas wilson இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.