சாதனை படைப்பதைக் காட்டிலும் வெற்றிபெறுவதுதான் முக்கியம் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கருத்து
Nov 28 2015 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாதனை படைப்பதைக் காட்டிலும், வெற்றிபெறுவதுதான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. அதே சமயம், அந்நிய மண்ணில் கடந்த 9 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருந்த தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, சாதனை படைப்பதைக்காட்டிலும் வெற்றிபெறுவதுதான் முக்கியம் என குறிப்பிட்டார்.