தடகளப் போட்டியின் நட்சத்திர வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார் - அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு ஓய்வுபெற திட்டம்
Oct 8 2015 10:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தடகளப் போட்டியில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டிகளில் உலக சாதனையை படைத்தவர் 30 வயதான ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்திலும் உலக சாதனை புரிந்துள்ள இவர், இந்த 3 தடகளப் போட்டிகளிலும் ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றவர். மெக்ஸிகோ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள உசேன் போல்ட், அடுத்த ஆண்டு பிரசில் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பின்னர், ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் இதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, 2017-ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் ஓய்வுபெறப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.