இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள், நியூயார்க்கில் கோலாகலமாகத் தொடங்கின
Aug 31 2015 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள், நியூயார்க்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கவுள்ளன.
ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி, இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள இப்போட்டியில், முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். ஆடவர் பிரிவில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், ரோஜர் ஃபெடரர், நடால், முர்ரோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மகளிர் பிரிவில், அமெரிக்காவில் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, குவிட்டோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் களமிறங்கியுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில், தரவரிசையில் முதல் நிலையில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சா - ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்ப்பு உள்ளது.