சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
Aug 29 2015 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் சார்பில், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கோவை, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற முதல் 2 அணிகளுக்கு, அமைச்சர்கள் திரு. T.K.M. சின்னையா, டாக்டர். எஸ். சுந்தரராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இதனிடையே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் இறகுப் பந்து போட்டி, திருச்சியில் உள்ள காவேரி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த 23 கல்லூரிகளின் வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. போட்டியில் வெற்றிபெறும் வீராங்கனைகள், பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.