தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு
Aug 29 2015 7:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை ஒட்டிய சரக அளவிலான பள்ளிகள் பங்கேற்ற தடகள விளையாட்டுப் போட்டி பையர்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு. விவேகானந்தன் போட்டிகளை தொடங்கி வைத்தார். பாப்பிரெட்டிப்பட்டி சரகத்தையொட்டிய 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் 500க்கும் மேற்பட்டோர் தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியின் பரிசளிப்பு விழா வரும் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.