ப்ரசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி : ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடத்தப்பட்ட மாபெரும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு
Jul 31 2015 7:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப்ரசிலில் அடுத்து ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதை யொட்டி மாபெரும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், அடுத்த ஆண்டு ப்ரசிலில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டியை அந்நாடு முதல்முறையாக நடத்துகிறது. இதற்காக, ஏராளமான செலவுகளை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. போட்டி நடைபெறும் ரியோ-டி-ஜெனிரோவில் நேற்று மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் குதிப்பது, கடலில் ரோவர்கோஸ்டரில் நீரிலிருந்து நிலப்பகுதிக்கு வருவது போன்றவை இதில் இடம்பெற்றன. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் தொடர்ந்து அங்கு பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒலிம்பிக் போட்டியின்போது, ராணுவம், காவல்துறை, கடலோர பாதுகாப்புதுறை தேசிய மாணவர் படை என 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.