தூத்துக்குடியில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கடற்கரைப்பகுதி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி
Jul 31 2015 7:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் தமிழகஅரசின் பேரிடர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கடற்கரைப்பகுதி மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களின்போது பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பேரிடர் அபாய மேலாண்மை திட்டப்படி கடலோர பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த மாணவர்களுக்கு இலவச நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் தவளகுளத்தினைச் சேர்ந்த 24 மாணவர்களுக்கு ஒரு வார காலம் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. கட்டணம் எதுவும் இன்றி இந்த நீச்சல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.