2022-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் சீனா, கஜகஸ்தான் இடையே கடும் போட்டி - மலேசியாவில் நாளை வாக்கெடுப்பு நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு
Jul 30 2015 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2022-ம் ஆண்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் சீனா - கஜகஸ்தான் நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தேர்வில் வெற்றிபெறும் நோக்கில், பிரமாண்டமான முன்னோட்டக் காட்சியை இருநாடுகளும் வெளியிட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகும் நாடுகளின் இறுதிப் பட்டியலில் சீனாவும், கஜகஸ்தானும் உள்ளன. சீனா தலைநகர் பெய்ஜிங்கிலும், கஜகஸ்தான் தலைநகர் அல்மாட்டியிலும் போட்டியை நடத்த முனைந்துள்ளன. இதற்காக, ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தேர்வில் வெற்றிபெறும் நோக்கில், பிரமாண்டமான முன்னோட்டக் காட்சியை இருநாடுகளும் வெளியிட்டுள்ளன. இந்த இரண்டு நாடுகளில் எங்கு போட்டியை நடத்தலாம் என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு, மலேசியாவின் கோலாலம்பூரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நாளை நடத்த உள்ளது. 2022-ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டி, ஆசிய கண்டத்தில் நடைபெறும் 2-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.