திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது
Jul 29 2015 9:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
திருச்சி மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் முறையே 14 மற்றும் 8 அணிகள் கலந்துகொண்டன. லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில், இரட்டையர் பிரிவில் முகில்-ஜோஸ்வா இணை முகன்-பிரபாகரன் இணையுடன் மோதியது. இரண்டு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 9-6 என்ற புள்ளிக் கணக்கில், முகில் ஜோஸ்வா இணை வெற்றிபெற்றது. இதேபோல் ஒற்றையர் பிரிவில் ரஞ்சித், பிரகாஷ், அரவிந்தன் ஆகியோர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்றுவரும் தேசிய Hand Ball போட்டியில் தமிழக அணி இதுவரை 5 போட்டிகளில் வெற்றிபெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதேபோல் மற்றொரு பிரிவில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், பீஹார், ஹிமாச்சல்பிரதேஷ் ஆகிய மாநில அணிகள் வெற்றிபெற்றுள்ளன.