சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது தொடரப்பட்ட வழக்கு - முன்னாள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தலைவர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு
Jul 3 2015 6:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் ஐ.பி.எல். தலைவர் லலித்மோடி மீது தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தலைவர் சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் 425 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை வழங்கியது தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில், அதன் முன்னாள் தலைவர் லலித்மோடி மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பையில் நேற்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சீனிவாசனிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்தது. இது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.