கேரளாவில் பாரம்பரிய படகு விழா கோலாகல தொடக்கம் - ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களிப்பு
Jul 3 2015 7:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் பாரம்பரியமிக்க சம்பா குளம் படகுப் போட்டி ஆரவாரத்துடன் தொடங்கியுள்ளது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
கேரள மாநிலம் அம்பலப்புழாவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் படகுப் பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நிகழ்ச்சியாக, அம்பலப்புழாவில் படகுப்போட்டி தொடங்கியுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். பாரம்பரிய முறைப்படி போட்டி தொடங்குவதற்கு முன்பு வரலாற்றை நினைவுகூறும் வகையில் இக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடு நடத்தப்பட்டது. இந்தப் படகுப் போட்டியின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 2-வது வாரத்தில் பிரசித்திப் பெற்ற நேரு கோப்பைக்கான பாம்பு படகுப் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.