தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் மதுரை அணி கோப்பையை வென்றது
Jul 3 2015 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில், மதுரை அணி வெற்றி பெற்று கோப்பையை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், கோவில்பட்டி கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 20 வயதுக்குட்பட்ட மகளிருக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் மதுரை அணி 37-க்கு 35 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. மூன்றாவது இடத்தை தஞ்சை அணி வென்றது.