ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு : முதல் 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிப்பு
Sep 19 2023 3:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 22, 24 மற்றும் 27 தேதிகளில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளில், பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் கடைசி போட்டியில் மட்டும் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.